Monday, September 27, 2010

விட்டு விடு என்னை!

விட்டு விடு என்னை!
விட்டு விடு என்னை!
விலகி செல்கிறேன்!
உன்னை விட்டு!

என் இதய தோட்டத்தில்
விலகாமல் சிறகடித்து
என் மனதை கவர்ந்து
சிறைபிடிக்காதே! கள்வனே!

விலகி செல்கிறது உடல்
விலகாமல் என் மனம்!
விட்டு விடு....
என் மனதினை!

விடுதலையை விரும்பாமல்
விடுதலை கேட்கிறது...
என் மனம்...
விட்டு விடு என்மனதினை!

மலர்கள் சிரிக்கின்றதோ!!

மலர்கள் சிரிக்கின்றதோ!
அழகு முகத்தில்
பனித்துளி முத்துக்கள்...
அழகாய் மின்னுகின்றது!

ரோஜா!

வண்ண வண்ணமாய்
அடுக்கிய அழகிய
இதழ்களில் மென்மையாய்
வாவென்று அழைத்து
மெல்லமாய் தலையசைக்கிறாய்!

உன் அழகினை
கண்டதும் கவர்ந்திடவே!
துடிக்கிறது மனம்!
என் கூந்தலில்...
சூடி கொள்வதைக்(கொல்வதை) விட

உன் தாயின் மடியில்
துள்ளிக் குதிப்பதைக் கண்டு
பிரியமனம் இல்லாமல்
பிரிந்தேன்...!

விடியல்...

பறவைகளின் இன்ப இசை!
புது மணம் பரப்பும்..
காலைத் தென்றல்!
தலையாட்டிடும் மலர்கள்...

சிரித்திடும் பனித்துளி!
மெல்லமாய் எட்டி
பார்க்கும் கதிரவன்!

புத்துணர்வாய்...
புதியதோர் உலகத்திற்கு
அன்பாய் அழைத்து
செல்கிறது விடியல்...

Tuesday, September 21, 2010

காதல் காப்பாற்றப்படட்டும்...

என் உள்ளத்தில் காதல் என்பது
இருவரும் ஒவ்வொருவரின்...
மிகை குறை புரிந்தே!
புரிந்ததின் பால் ஈர்த்து,ரசித்தே!
விட்டுக்கொடுத்து வாழ்வதே!

கல்லூரி சென்றாலே!
காதலிக்க வேண்டும் என்றே!
கௌரவ பிரச்சனையாகி விட்டதே!
காதலை புரிந்து கொள்ளாமல்
கண்டதும் காதல்...
காசிருப்பவர்களிடம் காதல்..

காலம் சில கடந்தும்
கலகம் கண்டு...
காதலா! இல்லையா! என்றே!
தெரியாமலே!
இழுத்து பிடித்து நிறுத்தி...
இருவரில் ஒருவர்
மட்டுமே! தியாகம்...

காதல்! காதல்! என்றே!
கல்யாணமும் கண்டு...
கனிவு மறைந்து....
காதல் கசந்து...
கச்சேரி படியேறி!
காதலுக்கு(விவாகரத்து) பிரிவு!

காதல் திருமணமோ!
நிச்சயித்த திருமணமோ!
சேர்வது இருமனம் தானே..!..?
இருவகை மணத்திலும்...
இருமனங்களில் காதல் மலர்ந்து
மணம் வீசிட வேண்டுமே!

காசிற்க்கோ! கௌரவத்திற்க்கோ!
அழகிற்க்கோ! இன்னும் எதெற்க்கோ!
காதலில் விழுந்து...
பின் தோல்வியும் கண்டு...
அன்பெனும் பாலத்தால்...
இணையும் காதலை
அசிங்கப்படுத்தாதீர்!

காதல் தொடங்கிய பின்
ஒரு மனதில் வாழும் காதலை!
ஒருதலை காதலை!
புரிய வைத்திடுங்கள்...

இருவரில் ஒருவரின்
உள்ளத்தில் காதலிருந்தால்
உள்ளத்தில் வாழட்டும்...
உங்களை பிடிக்காதவரை
பிடிவாதத்திற்க்காக பிடித்து
வைக்காதீர்....

இருவரின் உள்ளங்களிலும்
காதலில்லை என்றறிந்த
பின்பே! பிரச்சனைகளுடன்
பிடிமானம் வேண்டாம்...!

முடிந்தால் காதலை
புரிந்து கொள்ளுங்கள்...
இல்லை என்றால்
பிரிந்து கொள்ளுங்கள்...
காதலின் புனிதம்
காப்பாற்றப்படட்டும்...!

காத்திருப்பேன்...!

கண்ணே! மணியே! கனியமுதே!
என் காதலியே! என்னவளே! என்றே!
கொஞ்சிய நீ...! மறப்பாயே!
என்னை... என்று
மதிகலங்கி சொல்கிறாயோ!

துரத்தி! துரத்தி! காதலித்த நீ...
உன்மேல் காதலில்லை...!
நல்ல நண்பர்களாகவே!
பிரிந்திடுவோமே! என்றே!
மதி கலங்கச் செய்கிறாயே!

என் காதலை புரிந்து
பித்து பிடித்த உன்மனம்
மாறி திரும்பும் வரை...
கலங்காமல் காத்திருப்பேன்!
என் கண்ணனே...!

Wednesday, September 15, 2010

உன்னைப்பற்றிய என் கவிதைகள்...

உன்னைப்பற்றிய என் கவிதைகள்...
காகிதமும்...,பேனாவும்... கொண்டு
கிறுக்கியது அல்ல....!

என் உயிர் கொண்டு
உன் நினைவுகளை...
ஓவியமாய் வரைந்த
காவியங்கள்....

காகித ஓவியம் சிதைந்துவிடும்!
என் மனவோவியமாய்... வரைந்த
உன் நினைவுகள் என்னும்
காவியம் சிதையாது அன்பே!

அன்பினை அளித்திடுவோம்....!

அன்பு செலுத்த செலவில்லை
அதில் ஏன் கஞ்சத்தனம்...
அனைவரும் மனிதர்கள்...
தன் சுற்றம்,தன் நட்பு
தாண்டாத அன்பு ஏன்......?

எதிரிகளிடம் அன்பு செலுத்தினால்
எவனும் நட்பாவான்...
எதிர்பார்ப்புகளுடன் மட்டும்...
அன்பினை செலுத்துவது ஏனோ...!...?

கொலை செய்தவனிடம்...
கொஞ்சமாய் அன்பு செலுத்தினால்...
மனம் திருந்தியே!
மகிழ்வாய் வாழ்வான்...

தீயோர் என்று ஒதுக்குவதைவிட
திகட்டிடும் அன்பினை அளித்தால்...
திருந்தியே! வாழ்ந்திடுவாரே!

அன்பினை செலுத்திடுவோம்!
அனைவரும் அன்பிலே!
இன்பமாய் இணைந்திடுவோம்!

Friday, September 10, 2010

நிலவு!

வெள்ளையாய் வந்த
அழகு ராஜகுமாரியோ...!
காண காலையிலிருந்து
மாலைவரை தவம்!

சிலநாட்கள் பாதி முகம்
மட்டும் ஏனோ...!...?
மாதம் ஒரு நாள்
தரிசனம் தர
மறுப்பது ஏனோ..!...?

விண்மீன் தோழிகள்
உனக்கு துணையோ!
தோழிகளுடன் முகிலில்
மறைந்து கண்கட்டி
விளையாடுவதும் அழகே!

உன் தோழிகளுக்கு...
என் நேரமும் உன் நினைவோ..!...?
மின்னி! மின்னியே! அழகாய்
உன் புகழ் பாடுகின்றனரே!

உன் காதல் இல்லை...

உன் காதலில்லை என்று
என் அறிவிற்கு எட்டியது
என் உணர்வுகளுக்கு எட்டவில்லை
கண்ணீர் துளிகளாய் என்
காதலை சிந்துகிறது.....

நினைவுகள் போதும்!

உன்னை மறந்து வாழும்
வேதனையை விட!
உன் நினைவுகளை சுமந்து
வாழும் சுகம்
ஒன்றே! போதும்...

Thursday, September 9, 2010

முன்னேற்றம்...

புறஞ்சொல்லிகள் பொறாமை 'தீ'
கொண்டு வருத்த 'தீ'
மூட்டி வாழ்கையில் வேதனை
அனல் அடிக்கவைககிறார்கள்....

பணைமரத்தடியில் நின்று பால்குடித்தால்
கள்குடித்தான் என்று பரப்பியது மாறி
பணைமரத்தடியில் பணங்காயுண்டாலும்...
கள்குடித்து விழுந்து கிடந்தான் என்றே!
மனங்கூசாமல் பறையடிக்க
முன்னேற்றம் கண்டுவிட்டார்கள்...

Wednesday, September 8, 2010

இசை!

இனிய கவிதை வரிகளில்
இன்பமான மெல்லிசை மீட்டி
இன்பத்தின் உச்ச பரவசத்தில்
பறக்க வைத்திடும்...
இன்ப இசை ஒன்றே!
போதும் மனம்
இன்பத்தில் இலய்த்திட...

Tuesday, September 7, 2010

புண்படுத்திய ராசி...

பெண் பிறந்த ராசியால்
குடிசையிலிருந்த நான்
இன்று கோபுரத்தில் என்று
சொல்லும் தந்தை...

லக்ஷ்மிகரமான பெண் கையில்
தொடங்கினால் தொடங்கும்
தொழில் வெற்றி என்று ஊரில்...

உங்கள் பெண் ஜாதகத்தில்
எங்கள் இல்ல மருமகளானால்
கூரை உடைந்து கொட்டிடும்
செல்வம்... என்றே வரன் வீட்டினர்

பல காரணங்களால் முடிவாகவில்லை
வரன் உங்கள் பெண்ணை
பார்த்தவுடன் பலநாட்களாய் தள்ளி
போன திருமணம் அரங்கேறிவிட்டது...
ராசியான பெண்...

என்று கேள்விப்பட்ட போதெல்லாம்
என் மனம் சிறிதளவு பூரித்தது...
அதே! ராசியால் இன்று மனம்
புண்படுகிறது....

நீ என் வாழ்கையில் வந்ததால்
விட்டு சென்ற என் முன்னாள்
காதலி திரும்பிவிட்டாள்...

நீ வந்த ராசி என்று 'நீ' சொன்னாய்
முதன்முதலில் என் மனதை
புண்படுத்தியது என் ராசி...

என் காதலை சொல்லும்...

உன் பெயரினை எழுதி
உன்னை அதில் காண்கிறேன்
அதில் நான் அளித்திடும்
முத்தத்தின் ஈரங்கள்
சொல்லும் என் காதலை....

Monday, September 6, 2010

எங்கே காதல்...

காதல்... காதல்... காதல்...
எங்கே காதல்...

உள்ளத்தின் உணர்வுகளில்
உண்மையான காதலுக்கு
ஜாதி ஏற்படுத்திடும் தடை
மாறிவிட்டது...

ஐஸ்கிரீம் ஒன்றில்
இருவர் உண்கிறார்கள்
உருக, உருக
உருகிவிடுகிறது காதல்...

அலைபேசியில் அசைபோட்டிடும்
காதல் அலையாய்
அலைவரிசையிலே
கரைந்துவிடுகிறது காதல்...

பர்ஸ் இருந்தால் பாசமாய்
பேசிடும் சில பாவையர்கள்
பர்ஸ் காலி என்றவுடன்
பறந்துவிடுகிறது காதல்...

பிகரென்று பின்னால்
அலைந்திடும் காதலன்
பிசிறில்லாத அழகுடன்
இன்னொருத்தி கிடைத்தால்
பிய்த்துக்
கொள்கிறது காதல்...

தகதகவென தங்கத்தை
தாங்குபவளிடம் தடுமாறுகிறான்
தங்கம் தனக்கில்லை
தாலி போதும்
கட்டிய புடவையுடன் வந்தால்
தாவி விடுகிறது காதல்...

பளபளப்பாய் இருப்பவளிடம்
பாசத்தை காட்டி
காமக்களியாட்டம் நடத்தி
பாவையின் உயிரை
பறித்துவிடுகிறது காதல்...

விளையாட்டாய் பொழுதுபோக்காய்
காதல் சொல்லி விளையாட்டிற்கு
சொன்ன காதல் என்று
மனதிற்கு விஷம் கொடுத்து
கொன்று விட்டு
விலகிவிடுகிறது காதல்...

இதுதான் இன்றைய காதலோ!
நான் பேச நினைத்ததை
நீ பேசியது அப்பொழுது!
எங்கே காதல் என்று
தேடிடும் காதல் இப்பொழுது!

Friday, September 3, 2010

வதந்தி பரப்பிகள்...

அழகிய ஓவியத்தின்
மதிப்பை காண சகியாமல்
மனம்புழுங்கி மதிகெட்டு
அசிங்கமாய் சித்திரத்தை
சிதைக்க வண்ணங்களை
அள்ளி தெளிப்பர்...