Thursday, June 16, 2011

காதல் கொலையாளியல்ல!

காதல் ஜீவித்ததில்...
புதிய ஜனனம்!

காதல் நெஞ்சத்தில்...
என்றும் பரவசம்!

காதல் உள்ளுக்குள்...
உண்மையாய்...!

காதல் நினைவுகள்...
நித்தியமாய்..!

காதல் வலிகள்...
சுகமாய்...!

காதல் வாழ்வில்...
முழுதுமாய்...!

காதல் என்றுமே!
மரணிப்பதில்லை...

காதலுக்காய் ஏன்
மரணிக்கிறார்கள்...

காதல் கொலையாளியல்ல!

மரணிக்கிறது!

நட்பு எளிதாய்
காதலாகிட!
காதல் எளிதாய்
நட்பாகிட மறுக்கிறது!
மரணித்தது காதல் மட்டுமா...?...!
மரணிக்கறது நட்பும்....!

சுகமாகிறேன்!

நீ பிரிந்தும்
சுகமாயிருக்கிறேன்
என் பிரிவு உனக்கு
சுகமென்பதால்...!

சுவாசமாக! என்னை சேர்ந்திடுவாய்!

நீ விட்டுசென்ற பின்பு
விடத்துணிந்த உயிரை!
விடாமல் பிடித்துவைக்கிறேன்!
என்றாவது என் சுவாசமாக!
என்னை சேர்ந்திடுவாய்! என்று!

நிற்கதியாக! நான்!

என்னை ரசித்த பொழுதில்
ரசிப்புக்கவிதை நீ!

என்னை கொஞ்சும் பொழுதில்
கொஞ்சும்கவிதை நீ!

என்னிடம் ரகசியம் பேசியபொழுதில்
ரகசியக்கவிதை நீ!

என்னிடம் கோபத்தில் திட்டியபொழுதில்
கோபக்கவிதை நீ!

என்னை ஏமாற்றிய இப்பொழுதில்
எக்கவிதையோ! நீ!

நீயில்லாத நிற்கதியாக! நான்!

Friday, June 10, 2011

நினைவே! நிரந்தரம்!

நீயே! என் நிரந்தரமென்று!
நிரந்தரமாக! நீங்கியது ஏனோ!
நீ நீங்கினாலும்...
நிரந்திரமில்லா வாழ்வில்...
உன் நினைவுகள் மட்டுமே!
நிரந்தரமாய் நிறைகிறது!

துளிதுளியாய் தளிர்கிறாய்...!

உன் நினைவில்...
கண்ணீர் துளிக்கிறேன்!
ஈரமற்ற உன் நெஞ்சத்தை
ஈரமாக்கிடல்ல!

கண்ணீர் துளிகளில்
என் நெஞ்சத்திலிருந்து
ஒரு துளியில்லாமல்
உன்னை அகற்றிட!

ஏனோ!

நான் துளித்திடும் கண்ணீரில்
என் நெஞ்சத்தில்...
துளிதுளியாய்...
தளிர்கிறாய்!

புரியவில்லையோ!

ஊர் எதிர்ப்பு...!
உறவுகள் எதிர்ப்பு...!
உன் எதிர்ப்பு...!
உடைத்தெறிந்து
உன் காதலால்...!
உன் இதயத்தில்...!
தஞ்சமாக!
தவிக்கிறேன்!
என்னவனே!
புரியவில்லையோ!

முதிர்கன்னி!

கல்யாண சந்தையில் காலடி வைத்து
காலம் பல கடந்தும் கனிவான
கணவனுக்காய் காத்திருப்பு
கனவுகளிலே கழிகிறது காலம்

இவளின் கனவுகளை தள்ளிவிட்டு
தந்தையின் எதிர்ப்பார்ப்பில் மருமகன்
தாயின் எதிர்பார்ப்பில் மருமகன்
அண்ணனின் எதிர்பார்ப்பில் மச்சானென்று

வாழப்போகிறவளை விடுத்து இவர்கள்
வாழப்போவது போல்....
தட்டிக்களிக்கப்படும் வரன்கள்...
இவள் கனவுகள் கசந்து விட்டது

கனவினில் மணக்கோலம் கண்டு...
கண்ணீர் வடித்துக்கொண்டு...
மற்றோரின் விருப்பத்திற்க்காய்...
முதிர்கன்னியாய் இவள்...!