Tuesday, September 20, 2011

எப்பொழுது தருவாய்!

என் மனதில் உன்னை
வெட்ட வெட்ட தளைந்தாய்
வேரறுத்தேன்
விடாமல் தளைகிறாய்!
காதல் கனிகளை
எப்பொழுது தருவாய்!

திருடிய தித்திப்பு!

திருடிய கற்பனையில்
திகட்டாத கனவுகள்...
திரைப்பட பாடலில்
நாம் இருவரும்
காதலர்களாக!

பிரம்மனின் கிறுக்கல் என்னவோ!

பிரம்மனின் இடதுகை கிறுக்கலோ!
என் விதி என்றிருந்தேன்
அழகிய கவிதையாக உன்னை
காணும் வரையில்...

என்விதியில் நீ வந்தால்
என் சொந்தகவிதை..
நீ இல்லாமல் சென்றால்
நான் எட்ட ரசிக்கும்
என் ரசிப்புக்கவிதை...

நீ என் சொந்தகவிதையோ!
நீ என் ரசிப்புகவிதையோ!
பிரம்மனின் கிருக்கலையே!
ஆராய்கிறேன்...