Thursday, November 25, 2010

மழை அளித்திடும் முத்தம்!

மழை அளித்திடும்
முத்தத்தால்...
மழைக்கும் வலி இல்லை
மண்ணிற்கும் வலி இல்லை
பிறப்பது இன்பமே!

மழை நீ!
மண் நான்!
முத்தம் அளித்திட்டால்
பிறப்பது காதலின்
இன்பமே!

Tuesday, November 9, 2010

இழப்பினை அறிவாரோ!

மலரினை இழந்த செடியின்
வேதனையை யார் அறிவாரோ!
காதலை இழந்த முகத்தின்
வேதனையை யார் அறிவாரோ!

மலர் பூத்திட்ட செடியின் மகிழ்ச்சியும்
காதல் பூத்திட்ட முகத்தின் பூரிப்பையும்
உலகம் அறியுமே!
அறிந்ததும் பறித்திட
ஆயிரம் கைகள் இங்கே!

சுமந்திட்டாலும் சுமையில்லா சுகமே!
சுமந்திட்ட அன்னைக்கு! இங்கும் சுகமே!
மலரை சுமந்திட்ட செடிக்கும்!
காதலை சுமந்திட்ட இதயத்திற்கும்!

எங்கள் வேதனையில் சுகம் கண்டிடும்
கழுகுகள் எங்களின் இதயத்தை பறித்து
சுகத்தை சும்மா அள்ளிவிடுகின்றனரே!
அது நிலைக்காத சுகம்
அவர்களுக்கு என்று அறிவாரோ!