Tuesday, September 20, 2011

எப்பொழுது தருவாய்!

என் மனதில் உன்னை
வெட்ட வெட்ட தளைந்தாய்
வேரறுத்தேன்
விடாமல் தளைகிறாய்!
காதல் கனிகளை
எப்பொழுது தருவாய்!

திருடிய தித்திப்பு!

திருடிய கற்பனையில்
திகட்டாத கனவுகள்...
திரைப்பட பாடலில்
நாம் இருவரும்
காதலர்களாக!

பிரம்மனின் கிறுக்கல் என்னவோ!

பிரம்மனின் இடதுகை கிறுக்கலோ!
என் விதி என்றிருந்தேன்
அழகிய கவிதையாக உன்னை
காணும் வரையில்...

என்விதியில் நீ வந்தால்
என் சொந்தகவிதை..
நீ இல்லாமல் சென்றால்
நான் எட்ட ரசிக்கும்
என் ரசிப்புக்கவிதை...

நீ என் சொந்தகவிதையோ!
நீ என் ரசிப்புகவிதையோ!
பிரம்மனின் கிருக்கலையே!
ஆராய்கிறேன்...

Thursday, June 16, 2011

காதல் கொலையாளியல்ல!

காதல் ஜீவித்ததில்...
புதிய ஜனனம்!

காதல் நெஞ்சத்தில்...
என்றும் பரவசம்!

காதல் உள்ளுக்குள்...
உண்மையாய்...!

காதல் நினைவுகள்...
நித்தியமாய்..!

காதல் வலிகள்...
சுகமாய்...!

காதல் வாழ்வில்...
முழுதுமாய்...!

காதல் என்றுமே!
மரணிப்பதில்லை...

காதலுக்காய் ஏன்
மரணிக்கிறார்கள்...

காதல் கொலையாளியல்ல!

மரணிக்கிறது!

நட்பு எளிதாய்
காதலாகிட!
காதல் எளிதாய்
நட்பாகிட மறுக்கிறது!
மரணித்தது காதல் மட்டுமா...?...!
மரணிக்கறது நட்பும்....!

சுகமாகிறேன்!

நீ பிரிந்தும்
சுகமாயிருக்கிறேன்
என் பிரிவு உனக்கு
சுகமென்பதால்...!

சுவாசமாக! என்னை சேர்ந்திடுவாய்!

நீ விட்டுசென்ற பின்பு
விடத்துணிந்த உயிரை!
விடாமல் பிடித்துவைக்கிறேன்!
என்றாவது என் சுவாசமாக!
என்னை சேர்ந்திடுவாய்! என்று!