பெண்பார்க்கும் படலம்
பார்த்ததும் பிடித்து
விட்டதாம்...
பொருத்தம் பொருந்தாமல்
போய்விட்டதாம்...
வாழப்போகிறவளை
விட்டுவிட்டு
அன்னையின் எதிர்பார்ப்பு
தந்தையின் எதிர்பார்ப்பு
சகோதரனின் எதிர்பார்ப்பு
என்று வழிவிட்டு
இவளின் கனவுகள்
நசுங்கிவிட்டது!
உருப்படாத ஜாதிபார்ப்பில்
உட்பிரிவு ஜாதியாம்
உடன்பாடில்லை
உடைந்திடும்
இதயங்கள்...
ஒப்பற்ற அழகில்
ஒரு சிலையென
இருந்தாலும்
ஒரு குறை காண்பித்து
ஒடுக்கப்படும்
இதயங்கள்
விணான பதார்த்தத்தில்
நசுக்கப்படும்
இவளின் ஆசைகளும்
வீணாய்
குப்பை கூடையில்
பெற்றோர்கள் பெண்ணை
காண்பிக்க
மற்றோர்கள் பார்த்து செல்ல
உணர்ச்சியற்ற காட்சிப்பொருளா
பெண்...!
good poem very good congrats
ReplyDeleteby
maniajith007