Thursday, December 2, 2010

காதல் பூத்திட்ட தருணம்!

பார்க்கும் முகமெல்லாம்
புதியதாய் பார்க்கும் பிரமிப்பு!

கேட்கும் குரல்களையெல்லாம்
எங்கோ! கேட்கும் பிரதிபலிப்பு!

அறிந்த இடத்திற்கு சென்றாலும்
அறியாமல் நுழைந்த முழிப்பு!

அறியாமலிருந்த 'நீ' மட்டும்
அறிந்தது போல் முத்தாய்ப்பு!

2 comments: