Friday, January 7, 2011

துன்பமும் இன்பமே!

சிறையும் சுகம்தான்
உன் எண்ணச் சிறையில்
நான் அகப்பட்டால்...

நெருப்பும் பனிக்கட்டிதான்
உன் காதல் நெருப்பில்
நான் தீண்டப்பட்டால்...

சூறாவளியும் தென்றல்தான்
உன் காதல் சூறாவளியில்
நான் சிக்கிக்கொண்டால்...

கோடைக்காலமும் மழைகாலம்தான்
உன் காதல் மழையில்
நான் நனைந்திட்டால்...

பாலையும் சோலைதான்
உன் காதல் மலரில்
நான் பூத்திட்டால்...

No comments:

Post a Comment