Wednesday, January 26, 2011

மாறிடுமோ!

ரசித்திடும் மழலை மொழியில்
வேதனை ஓலம்...
பசிக்குது காசு

யார்சொல்லிய பாடமோ!
பாட புத்தகம் சுமக்கும்
பிஞ்சு விரல்கள்...

யாசகத்திற்காக...
பாதங்களை பற்றுகிறது!

ஒடுங்கிய பாத்திரத்தில்
ஒடுங்கி விட்டது
இவர்களின் வாழ்வு!

பச்சை மண்கள்
பிச்சைக்காக கையேந்தும்
நிலை என்று மாறிடுமோ!

No comments:

Post a Comment