Tuesday, March 29, 2011

வளையல்...!

வளைந்திடும் நாகரிகத்தில்
வளையாமல் வளையல்
விதவிதமாய் வளையலில்
விலகாமல் மனம்

அலமாரியெங்கும் அடுக்கினாலும்
ஆசை தீரவில்லை
ஒவ்வொரு அசைவிலும்
அழகாய் இசைக்கிறது

இசை இசைதிடும்
பெருமை அளிக்கிறது
என் ஒவ்வொரு அசைவினில்

அசையாமல் கண்டு
அடுக்கிய வளையலின்
அழகினில் ஆழ்கிறேன்

வளையளினூடே
வளைந்து செல்கிறது
அவனின் நினைவுகளும்
வண்ண கனவுகளாய்

No comments:

Post a Comment