Friday, June 10, 2011

முதிர்கன்னி!

கல்யாண சந்தையில் காலடி வைத்து
காலம் பல கடந்தும் கனிவான
கணவனுக்காய் காத்திருப்பு
கனவுகளிலே கழிகிறது காலம்

இவளின் கனவுகளை தள்ளிவிட்டு
தந்தையின் எதிர்ப்பார்ப்பில் மருமகன்
தாயின் எதிர்பார்ப்பில் மருமகன்
அண்ணனின் எதிர்பார்ப்பில் மச்சானென்று

வாழப்போகிறவளை விடுத்து இவர்கள்
வாழப்போவது போல்....
தட்டிக்களிக்கப்படும் வரன்கள்...
இவள் கனவுகள் கசந்து விட்டது

கனவினில் மணக்கோலம் கண்டு...
கண்ணீர் வடித்துக்கொண்டு...
மற்றோரின் விருப்பத்திற்க்காய்...
முதிர்கன்னியாய் இவள்...!

No comments:

Post a Comment