Friday, June 10, 2011

துளிதுளியாய் தளிர்கிறாய்...!

உன் நினைவில்...
கண்ணீர் துளிக்கிறேன்!
ஈரமற்ற உன் நெஞ்சத்தை
ஈரமாக்கிடல்ல!

கண்ணீர் துளிகளில்
என் நெஞ்சத்திலிருந்து
ஒரு துளியில்லாமல்
உன்னை அகற்றிட!

ஏனோ!

நான் துளித்திடும் கண்ணீரில்
என் நெஞ்சத்தில்...
துளிதுளியாய்...
தளிர்கிறாய்!

No comments:

Post a Comment