Tuesday, September 21, 2010

காத்திருப்பேன்...!

கண்ணே! மணியே! கனியமுதே!
என் காதலியே! என்னவளே! என்றே!
கொஞ்சிய நீ...! மறப்பாயே!
என்னை... என்று
மதிகலங்கி சொல்கிறாயோ!

துரத்தி! துரத்தி! காதலித்த நீ...
உன்மேல் காதலில்லை...!
நல்ல நண்பர்களாகவே!
பிரிந்திடுவோமே! என்றே!
மதி கலங்கச் செய்கிறாயே!

என் காதலை புரிந்து
பித்து பிடித்த உன்மனம்
மாறி திரும்பும் வரை...
கலங்காமல் காத்திருப்பேன்!
என் கண்ணனே...!

No comments:

Post a Comment