Friday, September 10, 2010

நிலவு!

வெள்ளையாய் வந்த
அழகு ராஜகுமாரியோ...!
காண காலையிலிருந்து
மாலைவரை தவம்!

சிலநாட்கள் பாதி முகம்
மட்டும் ஏனோ...!...?
மாதம் ஒரு நாள்
தரிசனம் தர
மறுப்பது ஏனோ..!...?

விண்மீன் தோழிகள்
உனக்கு துணையோ!
தோழிகளுடன் முகிலில்
மறைந்து கண்கட்டி
விளையாடுவதும் அழகே!

உன் தோழிகளுக்கு...
என் நேரமும் உன் நினைவோ..!...?
மின்னி! மின்னியே! அழகாய்
உன் புகழ் பாடுகின்றனரே!

No comments:

Post a Comment