Monday, September 27, 2010

ரோஜா!

வண்ண வண்ணமாய்
அடுக்கிய அழகிய
இதழ்களில் மென்மையாய்
வாவென்று அழைத்து
மெல்லமாய் தலையசைக்கிறாய்!

உன் அழகினை
கண்டதும் கவர்ந்திடவே!
துடிக்கிறது மனம்!
என் கூந்தலில்...
சூடி கொள்வதைக்(கொல்வதை) விட

உன் தாயின் மடியில்
துள்ளிக் குதிப்பதைக் கண்டு
பிரியமனம் இல்லாமல்
பிரிந்தேன்...!

1 comment: