Saturday, October 2, 2010

போற்றுவோர் போற்றட்டும்... தூற்றுவோர் தூற்றட்டும்...

நாம் மட்டுமே! நம் கையில்
நம்பிக்கையாய்... தன்னம்பிக்கையாய்...
இருந்திடு மனிதனே!

முகஸ்துதி பாடி
முதுகுக்கு பின்னால்...
குத்துவோரும் உள்ளனரே!

பொறாமை தீயில்
வெந்து பொய்
பல சொல்லி நோகடிப்பரே!

தொட்டதெற்கெல்லாம் குறை
சொல்லி கிண்டலாய்
சிரிப்பாய் சிரிப்பாரே!

நிறை மட்டும்
சொல்லி புன்னகை
பூவாய் பூப்பாரே!

எவராய் இருந்தால்
என்ன நியாயத்தை
மட்டும் ஏற்றுக்கொள்வீரே!

துதியில் மயங்காதீர்!
பொறாமையில் நோகாதீர்!
குறைசொல்லிகளால் துவண்டுவிடாதீர்!
நிறைகேட்டு ஆணவம் கொள்ளதீர்!

போற்றுவோர் போற்றட்டும்...
தூற்றுவோர் தூற்றட்டும்...
சமநிலையுடன் இருப்பீரே!

No comments:

Post a Comment