Saturday, October 2, 2010

என் மனமே! தூது....

அன்பே! உனக்கு
என் மனதை சொல்ல
காற்றை அனுப்ப எண்ணினேன்...!
காற்றில் நிறைய மாசு
கலந்து விட்டதாம்..
மாசற்ற காதல்
மாசாகி விட்டால்...
என்ன செய்வேன்!

ஆற்று நீரில்
என் அன்பினை
அனுப்ப எண்ணினேன்...!
ஆற்றில் சாயநீர்
கலக்கிறார்கலாம்...
களங்கமில்லாத காதலில்...
கறை பட்டுவிட்டால்...
என்ன செய்வேன்!

அழகு புறாவை
என் காதல் சொல்ல
அனுப்ப எண்ணினேன்
புறாவை வறுத்து
உண்ணும் கொடியவர்
பலர் உள்ளனராம்...
நல்ல காதல் நம் காதல்
நாசம் செய்துவிட்டால்
என்ன செய்வேன்!

என் மனதையே!
தூதாக அனுப்பிவிட்டேன்
கண்களை மூடி...
உணர்ந்து பார்
என் மனது
உனக்கு புரியும்...
உயிரானவனே!

No comments:

Post a Comment