Wednesday, October 13, 2010

இவை புதிய மாற்றங்கள்...!

ஒரு வரி விடாமல் படிக்கும் புத்தகத்தில்
ஒரு வரி கூட படிக்க முடியவில்லை
சிரிக்கிறது புத்தகம்...

அதிர,அதிர நடக்கும் என் கால்கள்
அன்னமோ! என்று பிறரை
கேலி பேச வைக்கிறது இன்று...

தோழிகளுடன் கைகோர்க்கும் கைகள்
தோழிகளை விட்டு தொலைவில்...நளினமாய்
துப்பட்டாவின் நுனியை சுற்றுகிறது...!

குறும்பு ,கேலிச் சிரிப்பு சிரிக்கும் முகம் இன்று
மனதின் நாணத்தால் பைத்தியமோ! என்று
பிறர் பார்க்க தானாய் புன்னகை பூக்கிறது!

ஏன் இந்த புதிய மாற்றங்கள் எனது உயிரே!
என்ன மாயமோ! மந்திரமோ!
என் மனதில் நீ நுழைந்த ரகசியமோ!

1 comment: