Sunday, October 17, 2010

ஆசை...! ஆசை...!

உயிரான காதலனே!
உன் தோளினில் சாய்ந்து
உன் மொழிகளை
ரசித்திட ஆசை...!

மழைத்தூரலில் நடக்கையில்
உன் ஒரு விரல் பிடித்து
ஒரு குடையில்
நடந்திட ஆசை...!

வயல்வெளியில் நடந்திடுகையில்
உன் கைகளை இறுகபிடித்து
வயல்வெளி தென்றலை
முகர்ந்திட ஆசை...!

சிறிய கோபத்தின் ஊடலில்
சமாதானமாய் பேசிடும்
உன் கொஞ்சும் வார்த்தைகளை
கேட்டிட ஆசை...!

உன் மடி சாய்ந்து
உலகம் மறந்து...
'நீயே' உலகமென்று
உறங்கிட ஆசை...!

No comments:

Post a Comment