Wednesday, October 13, 2010

எங்கே! நீ! எங்கே!

என்னவனே!
என் உயிர் என்னிடமில்லை
என்றறிந்த தினம் முதலே!
எங்கிருக்கிறாய் என்றே! தேடுகிறேன்!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

என் கண்களில் நீ தென்படவில்லை..!
என் கனவில் உனக்கு உருகொடுக்கிறேன்!
விடிந்ததும் உன் உருவமும் மறக்கிறது!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

உன் குரலுக்கு இசையினை மீட்டி..
கேட்டு கேட்டு ரசிக்கிறேன்!
இன்பமாய் ஆழ்க்கையில் கற்பனை
இசைஎன்றே! அறிகிறேன்..!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

அன்பின் அமுத சுரபியே!
அறிவின் உச்சமே!
புன்னகையின் சொந்தமே!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

தேடி வரும... வரன்களில்
உன்னையே! தேடுகிறேன்...!
என் மனதை கொள்ளையடித்த
என் செல்லமே!
நீ மட்டும் இல்லை...

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

எனக்காக பிறந்தவனே!
எனக்காக வருவாய்...!
எனக்கே! எனக்கே!
வருவாய் அன்பே!

என் கனவு நீயே!
என்று வருவாய் என்றே!
காத்திருக்கிறேன்...!
விரைவில் என்னை
சேர்ந்திடுவாயே!
என் கண்ணின்மணியே!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைக்கிறேன்!

2 comments: