Tuesday, August 10, 2010

மழை!

கருமேகம் சூழும் இருளில்
என்னுள் மெல்லிய பிரகாசம்!
குளிர் தென்றல் மோதுகையில்
என்னுள் மெல்லிய அசைவு!

மழையே! வருவாயா! வரமாட்டாயா!
என்னுள் மெல்லிய பரிதவிப்பு!
மெல்ல!மெல்ல! தூரலிடுகையில்!

என் பரிதவிப்பு! மெல்ல!மெல்ல!
என்னுள் மெல்லிய புன்னகை
பூவாய் பூக்கிறது!

நீ மீட்டும் தூரல் இசையில்
இசைகிறேன் நானும்!
முகம் கொண்டு காணுகையில்
கண்களில் மெல்லிய படபடப்பு!

உன் பரவச நடனத்தில்
நானும் பரவசமாய்!
உன்னில் மெல்ல!மெல்ல!
கரையவே! துடிக்கிறது மனசு...!

No comments:

Post a Comment