Thursday, August 12, 2010

முக ஸ்துதி....

கண்ணை மூடி
கடவுளிடம் லயித்த என்னை!
ஸ்ஸ்ஸ்.....ப்பா என்ற சத்தமே!
கவனத்தை சிதறடித்தது!

தன்னை தூக்கியே!
நடந்ததால் அந்த
'பெரிய'யம்மாவின் களைப்பின்
வெளிப்பாடு ஸ்ஸ்ஸ்.....ப்பா........

தங்கம் விலை குறைந்துவிட்டதோ....!
என்றே! மெல்லிய ஆச்சரியம்...!
அங்கமெல்லாம் தங்கமே!
நிறைந்திருக்கிறது...! அந்தம்மாளிடம்...

அர்ச்சனையின் பாதியிலே!
பாதிவாய் பிளந்த
பவ்ய புன்னைகையில்
அர்ச்சகர்...!

ஸ்பெஷல் பிரசாதத்துடன்....
அந்தம்மாவின் முன்னால்...
அவர் புன்னைகை போலவே!
அர்ச்சனை தட்டில் காசு...!

பிரகாரத்தை வலம் வருகையில்
இருபெண்கள் கையை பிடித்தே
புன்னகையுடன்...
அந்தம்மாவை வலம் வருகிறார்கள்...
பணமழை பொழிகிறது....!

வெளிப்பிரகாரத்தில் பலர்
கையைகூப்பி வணங்கியே!
வெள்ளந்திப்புனகையுடன்.....
கப்பலோ! இல்லை காரில்...
வழியனுப்புகிறார்கள்....!
விடாது பொழிகிறது பணமழை!

ஆச்சர்யம் தாளாமல்
யாரந்தம்மா என்றேன்...
தாங்கிய பெண்களிடம்!
அந்த நிறுவனத்தின் நிறுவனர்
மனைவி! என்றே!

ஊரடித்து உலையில்
போட்ட காசு அந்த உடம்பு
என்றே! அந்தம்மாவை
போல் நடந்தே!(நடித்தே)...
கேலிச்சிரிப்பு....

ஊரடித்து உலையில் போட்ட
காசாம்.....
ஸ்பெஷல் பிரசாதமும்...
பணிவான கைகூப்பலும்...
வெள்ளந்தி புன்னகையும்...
தொடர்ந்த பணமழையில்
நனைந்ததும்... எதற்காக...!
ஸ்ஸ்ஸ்.....ப்பா....!!!!

No comments:

Post a Comment