Tuesday, August 3, 2010

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

களங்கமில்லாத எங்கள் நட்பை
காதலென்று நீ பறையடித்தாய்...
கடினமாய் உன்னை கண்டித்தேன்...
களங்கமில்லாத எங்கள் நட்பை
களங்கப்படுத்தியதற்காக இல்லை...

படித்த இளைஞன் நீ!
நாகரிங்கள் பல அறிந்தவன்!
படிப்பில் பல நாகரிங்களை கற்றறிந்தவன்...!
நாகரிகமென்று பல புதுமை
உடைகளை உடுத்துபவன்...!

நாகரிகமென்று சிகரெட்டில் சிக்கியவன்...!
நாகரிகமென்று தண்ணியில்(குடியில்) தத்தளித்தவன்...!
நாகரிக சிந்தை மட்டும் உன்னிடம் இல்லையோ!
நட்பையும்,காதலையும் பிரித்தறியாத மூடனாய்...
நீ இருக்கிறாய் என்ற மனவருத்தத்தில் மட்டுமே!

No comments:

Post a Comment