Tuesday, August 3, 2010

குடியில் கெடும் குடிகள்...

காலையில் பெண்டு,பிள்ளைகளிடம்
மாலையில் மளிகையும்,புத்தகமும்
வாங்கி வருகிறேன் என்றே! புறப்பட்டான்!

மூக்கை அடைக்கும் சாக்கடையில்...
முகம் சுளிக்கமால் முழுகுகிறான்...!

அழுக்கு துணிகளையும்
அலுப்பே இல்லாமல் அலசுகிறான்...!

அநாசயமாக முதுகில்
மூட்டையை முட்டி ஓடுகிறான்...!

தகிக்கும் தீயை சகித்து
வெந்தே இரும்பில் இரும்பாகிறான்...!

பரபரபாய் ஓடியே!
முதலாளியின் கட்டளையை முடிக்கிறான்...!

மாலையில் கை நிறைய காசு!
மளிகையும்,புத்தகமும் வாங்க செல்கையில்
வழியில் டாஸ்மாக்கில் கரைகிறது காசு!

தள்ளாட்டத்தில் வந்தவனிடம்
அடி, உதை தான் மிச்சம்
பெண்டு,பிள்ளைகளுக்கு...

மனைவியின் சொற்ப வருமானத்தில்
அரை வயிறு கஞ்சி நிறைகிறது...!

மறுநாள் காலையில் வழக்கம் போல்
பெண்டு,பிள்ளைகளிடம் கூறி செல்கிறான்....

No comments:

Post a Comment