Wednesday, August 25, 2010

வாழா வெட்டி...

கன்னியாய் இருந்தபொழுது
கண்ட கனவுகள் பகல் கனவாய்
இவளுக்கானதே!

கட்டியவன் கல்யாணத்திற்காக
வேஷம் போட்ட
கபடதாரி...

கணவனே கண்கண்ட தெய்வமென
வாழ்ந்தும் வெட்டியான கணவன்
வெட்டியதால் ஊரளித்த பெயர்
வாழா வெட்டி...

கொடுமையின் கொடூரனுடன்
வாழாமல் உயிரை விட துணிவு
இவளுக்கு!
பெற்றபிள்ளைகளுக்காக
பெற்றவர்களை நாடி இவள்...!

இவள் சிறிது சிரித்தாள்
சித்தரிக்கும் கதைகள்
ஊருக்குள்ளே!

சம்பளமில்லா வேலைக்காரியாக
இருந்தும்...
சகோதரனின் மனைவியின்
முனகல் இல்லத்திற்குள்ளே!

பிள்ளைகளை கரைசேர்த்திட!
பிள்ளைகளின் வருங்கால
கனவுகளுடன்....

துன்பகடலில் நாளும்
நீந்தியே! நித்தமும்
நிம்மதியின்றி.. வாழ்வே!

No comments:

Post a Comment