Tuesday, August 3, 2010

போலி வாழ்க்கை...

சோர்ந்து சோபாவில்
பல மனிதர்கள்....
வேலை களைப்பல்ல!

தன் வீட்டை விட
அவன் வீடு பெரியது!

தனக்கு கிடைக்கும் முன்னே!
அவனுக்கு ப்ரோமோஷன்!

தன் மகனை விட
அவன் மகனுக்கு சம்பளம் அதிகம்!

தன் மகளை விட
அவன் மகளுக்கு பெரிய
இடத்து மாப்பிள்ளை...!

எவ்வளவு கிடைத்தாலும் போதவில்லை
என்று...!

அவனை விட முன்னேற!
தன்னுள் இன்பம் தொலைத்து....

பணத்திலும், போலி கௌரவத்திலும்
இன்பம் தேடிகொண்டிருகிறார்கள்...

No comments:

Post a Comment