Sunday, August 29, 2010

செல்லக் கோபம்...

அதிகாலையில் இசைத்திடும் பறவைகளும்!
கண்களை வருடும் காலைத்தென்றலும்!
மலரிலே! மலர்ந்து மின்னும் பனித்துளியும்!
அழகாய் தலையாட்டும் நெல் நாற்றும்!

மழையில் மயக்கும் மண்வாசமும்!
வானம் தூவும் பூமழையும்!
உயிரினை உருக்கும் மெல்லிசையும்!
செல்லக் கோபமாய் கொஞ்சுகிறது!

நேற்று வரை உன்மனதில் நாங்கள்
மட்டுமே! இன்று காதலுமோ! என்று...

No comments:

Post a Comment