Tuesday, August 3, 2010

மரம்,செடி,கொடிகளின் கேள்வி....

துன்பமின்றி வாழ தூய்மையான
காற்றை கொடுக்கிறோம்...
தாகமின்றி வாழ குளிர்ச்சியாய்
மழை கொடுக்கிறோம்...

பசியின்றி வாழ பலவகைகளில்
உணவினை கொடுக்கிறோம்...
வெப்ப கொடுமையின்றி பயணம்செய்ய
நிழலினை கொடுக்கிறோம்...

எண்ணங்களை எழுத்தாக்க
காகிதங்களை கொடுக்கிறோம்...
வியாதிகள் பல குணமாகிட
மூலிகைகள் பல கொடுக்கிறோம்...

மனிதனே!
உன் வாழ்வின் ஆதாரம் நாங்கள்...
ஏன்?
எங்கள் வாழிடங்களை பறித்து...
வானுயர் கட்டிடங்களாய் மாற்றுகிறாய்...!

No comments:

Post a Comment