Tuesday, August 17, 2010

குரு கொடுக்கும் தட்சணை...

பாசமும், பரிவும் பெண்மையின் அழகே!
புகுந்த வீட்டில் பாசம் காட்டிடு பாசமகளே!
அடக்கமும், அமைதியும் பூவையினருக்குரியதே!
அடக்கமும், அமைதியும் காத்திடு அருமைமகளே!

மாமியாரும்,மாமனாரும் எங்களைப்போலவுனக்கே!
மரியாதையுடன் நடந்துகொள் மதிமகளே!
களைத்து வரும் கணவனுக்கு பக்குமாய்ச்சமைத்தே!
கனிவாய் அளித்திடு கனிமகளே!

மணாளனின் மனம் அறிந்து நடந்திடு
என் செல்வமகளே!
படித்த படிப்பில் சம்பாதித்து கணவனின் கஷ்டங்களை
களைந்திடு கருணைமகளே!

என்றே! வாழ்க்கையின் கல்வியை போதித்து
வரதட்சணை என்றே!
தட்சணையும்... அளித்திடும் குரு!
பெண்களை பெற்ற... பெருமைமிக்க பாக்கியசாலிகளே!

No comments:

Post a Comment