Wednesday, August 25, 2010

குழந்தை...














கை
,கால்கள் அசைக்கும்
துள்ளலில்..
அசையாமலே அசந்து
போகிறேன் நான்...

சிறுஅசைவும் உன்
விழிகளின் கவனத்தில்...
உருளும் விழிகளிலும்...
படபடக்கும் இமைகளிலும்...
என் மனமும் உருளுகிறது...

எதற்கு சிரிப்பென்று
புரியவில்லை உன்
இயல்பான சிரிப்பினில்
சிக்குகிறது மனம்...

உலகமே! உன் மூடிய
கைகளில் அடக்கம்...
என் விரல் உன் கைகளில்
அகப்படுகையில்

மெல்லிய இறுக்கம்
நிறைந்த மென்மையில்..
என் உலகமே! உன்
பிஞ்சுபாதங்களில் சரண்...!

No comments:

Post a Comment