மனம் அயர்ந்து வரும் வேளைகளில்...
உன்னிடம் கொட்டி அழும்போது
ஆறுதலாய் இருக்கிறது!
மனம் குழம்பி வரும் வேளைகளில்...
உன்னிடம் கூறும்போது
தீர்வு கிடைக்கிறது!
மனம் மகிழ்ச்சி பெறும் தருணங்களில்...
உன்னிடம் பகிர்ந்து கொள்ளும்போது
குதுகலமாய் இருக்கிறது!
மனதின் ரகசியங்கள் சுமையாகும் வேளைகளில்...
உன்னிடம் பகிரும்போது
சுமைகள் லேசாகிறது!
என் இன்ப,துன்பங்களில் பங்கெடுக்கும்
"நீயே" என் உன்னத! உயரிய தோழி!
No comments:
Post a Comment