Tuesday, August 3, 2010

காதல் வர காரணம்...

காதல் வருவதற்கு,
கண்கள் தான் காரணம் என்று
கண்களை குருடாகினேன்...!

இசை தான் காரணம் என்று
செவிகளை செவிடாகினேன்...!

வார்த்தைகள் தான் காரணம் என்று
வார்த்தைகளை ஊமையாக்கினேன்...!

சுவாசம் தான் காரணம் என்று
சுவாசத்தை நிறுத்தினேன்...!

ஆனாலும்,
இதயம் துடிக்கின்றது ...
காதல்!...காதல்!...காதல்!... என்று...

No comments:

Post a Comment