Thursday, August 26, 2010

துயரம்!.... வாழ்வின்.... உயரம்!

எங்கில்லை துயரம்!
எல்லோர் வாழ்விலும்
ஏதோவோர் துயரம்!
அன்னையின் அன்பில்லை!
தந்தையின் ஆதரவில்லை!
வாழ்க்கை வசதியில்லை!
படிக்க வாய்ப்பில்லை!
காதலி கடைக்கண்காட்டவில்லை!
காதலனை காணவில்லை!
கணவன் கணிவாயில்லை!
மனைவி சமையலில் உப்பில்லை!
பிள்ளைகள் முதலிடம் வரவில்லை!
நல்லவரன் அமையவில்லை!
அப்ப....ப்பா.. நாள்தோறும்
ஒவ்வொரிடமும் கேட்கும்
துயர வார்த்தைகள் இவை!
துயரமின்றி வாழ்வில்
உயரமேது! என்றறிந்து...
இறுக்கமான மனம்தளர்த்தி!
இன்பமாய் வாழ்ந்திடலாமே!

No comments:

Post a Comment