Sunday, August 29, 2010

பேனாவின் நாணம்!

அன்பே!
உன்னைப்பற்றி
கவிவரைய தொடங்கினால்
என் பேனாவும் ஒரு கணம்
நாணம் கொள்கிறது!

செவ்வானம்!

நான் உன்னை
எனக்காய் காக்கவைத்திட்ட
கோபத்தால் சிவந்ததோ!

பனித்துளி!

கதிரவனைக் கண்ட
நாணமோ!
அவன் இவளைக்
கண்டவுடன்
அழகாய் அழகு முகத்தினை
மறைக்கிறாள்...

மண் வாசம்!

மழையாகிய மதியான
காதலனை கண்டால்
மட்டுமே! வாசமாய்
தரிசனம் தருகிறாள்...

செல்லக் கோபம்...

அதிகாலையில் இசைத்திடும் பறவைகளும்!
கண்களை வருடும் காலைத்தென்றலும்!
மலரிலே! மலர்ந்து மின்னும் பனித்துளியும்!
அழகாய் தலையாட்டும் நெல் நாற்றும்!

மழையில் மயக்கும் மண்வாசமும்!
வானம் தூவும் பூமழையும்!
உயிரினை உருக்கும் மெல்லிசையும்!
செல்லக் கோபமாய் கொஞ்சுகிறது!

நேற்று வரை உன்மனதில் நாங்கள்
மட்டுமே! இன்று காதலுமோ! என்று...

Friday, August 27, 2010

அதிசய ஓவியம்!

என் மனதில் வரைந்த
அதிசய ஓவியமோ! நீ!
பேசும் ஓவியமாய்
என்னுடன் பேசுகிறாய்!

நீ அழிக்கவே! ஆணை இட்டாய்
உன் ஆணை நிறைவேற்ற!
கண்ணீரால் அழிக்கிறேன்!
அழிக்க முடியவில்லை!

Thursday, August 26, 2010

துயரம்!.... வாழ்வின்.... உயரம்!

எங்கில்லை துயரம்!
எல்லோர் வாழ்விலும்
ஏதோவோர் துயரம்!
அன்னையின் அன்பில்லை!
தந்தையின் ஆதரவில்லை!
வாழ்க்கை வசதியில்லை!
படிக்க வாய்ப்பில்லை!
காதலி கடைக்கண்காட்டவில்லை!
காதலனை காணவில்லை!
கணவன் கணிவாயில்லை!
மனைவி சமையலில் உப்பில்லை!
பிள்ளைகள் முதலிடம் வரவில்லை!
நல்லவரன் அமையவில்லை!
அப்ப....ப்பா.. நாள்தோறும்
ஒவ்வொரிடமும் கேட்கும்
துயர வார்த்தைகள் இவை!
துயரமின்றி வாழ்வில்
உயரமேது! என்றறிந்து...
இறுக்கமான மனம்தளர்த்தி!
இன்பமாய் வாழ்ந்திடலாமே!

Wednesday, August 25, 2010

தடுமாற்றம்!

காத்திருந்த போது
உன்னுடன் பேசிப்பார்த்த
வார்த்தைகளெல்லாம்
உன்னை கண்டவுடன்...
தடுமாறுகிறதே!
உன்னை பார்த்த
பரவசத்தில்...

வாழா வெட்டி...

கன்னியாய் இருந்தபொழுது
கண்ட கனவுகள் பகல் கனவாய்
இவளுக்கானதே!

கட்டியவன் கல்யாணத்திற்காக
வேஷம் போட்ட
கபடதாரி...

கணவனே கண்கண்ட தெய்வமென
வாழ்ந்தும் வெட்டியான கணவன்
வெட்டியதால் ஊரளித்த பெயர்
வாழா வெட்டி...

கொடுமையின் கொடூரனுடன்
வாழாமல் உயிரை விட துணிவு
இவளுக்கு!
பெற்றபிள்ளைகளுக்காக
பெற்றவர்களை நாடி இவள்...!

இவள் சிறிது சிரித்தாள்
சித்தரிக்கும் கதைகள்
ஊருக்குள்ளே!

சம்பளமில்லா வேலைக்காரியாக
இருந்தும்...
சகோதரனின் மனைவியின்
முனகல் இல்லத்திற்குள்ளே!

பிள்ளைகளை கரைசேர்த்திட!
பிள்ளைகளின் வருங்கால
கனவுகளுடன்....

துன்பகடலில் நாளும்
நீந்தியே! நித்தமும்
நிம்மதியின்றி.. வாழ்வே!

வாடகைத்தாய்...

சுமப்பதில் இவளுக்கு சுகமே!
தாய்மை வரமருளும்
தாயுமானவள் இவளே!

மழலை வரமருளும்
மங்கையர்க்கரசி இவளே!
இல்லச்சுமையை சுமக்க
சுமை இவளுக்கு!

பத்தியமும்,விரதமும்
பத்துமாத பந்தத்திற்கு
பரிவுடனே! ஏற்க்கிறாள்...

தன்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும்
என்றறிந்தே!
அழகான பூவினை
அன்பாய் சுமக்கும்
கற்பகவிருச்சம் இவள்...!

சுமையின் சுகமும்
உதையின் இன்பமும்
உருவாக்கிய பரவசமும்
மழலை இவ்வுலகை
கண்டவுடன்...
இவளின் மனதில்
உதைத்து...
பறிக்கப்படுகிறதே!

குழந்தை...














கை
,கால்கள் அசைக்கும்
துள்ளலில்..
அசையாமலே அசந்து
போகிறேன் நான்...

சிறுஅசைவும் உன்
விழிகளின் கவனத்தில்...
உருளும் விழிகளிலும்...
படபடக்கும் இமைகளிலும்...
என் மனமும் உருளுகிறது...

எதற்கு சிரிப்பென்று
புரியவில்லை உன்
இயல்பான சிரிப்பினில்
சிக்குகிறது மனம்...

உலகமே! உன் மூடிய
கைகளில் அடக்கம்...
என் விரல் உன் கைகளில்
அகப்படுகையில்

மெல்லிய இறுக்கம்
நிறைந்த மென்மையில்..
என் உலகமே! உன்
பிஞ்சுபாதங்களில் சரண்...!

Saturday, August 21, 2010

விளையாட்டு பொம்மையா...?

விளையாட்டாய் விளையாடி
செல்ல என் மனம்
விளையாட்டு பொம்மையோ...!

'நீ' காதல் என்றாய்
மறுத்தேன் நான்...
மறுத்த என்னில்
நீ நுழைந்ததும்...

விளையாட்டிற்காக காதல்
சொன்னேன் என்கிறாய்....!
உனக்கு காதல் விளையாட்டா!
இல்லை என் மனம்
விளையாட்டு பொம்மையா...!

Thursday, August 19, 2010

என் தோழி...!

கலகலப்பாய் சிரிப்பு...
ஆட்டம்,பாட்டம்...!
காட்டன் புடவை ஆசிரியையை
கண்டவுடன் காணாமல்
போகும் நம் குறும்பும்...!

நம்மை சமாளியாமல்
பிரித்து அமரவைத்த
ஆசிரியையை இடைவேளையில்
நமக்குள்ளே! பலநாள்
பிரிவு போல் திட்டியே!
சோக ராகம் பாடுவோம்...!

பொக்கைவாய் பாட்டியை
பலித்துக் காண்பிப்போம்...!
துரத்தும் பாட்டியிடம்
தப்பிக்கவே! ஓடி..
பாட்டியை
ஒலிம்பிக் ஓட்டம் ஓட
வைப்போம்....!

பள்ளிவிட்டு வருகையில்
பிடித்த அடைமழையில்
இதுதான் வாய்ப்பென்றே!
நனைத்தே! நடந்தே!
சாலையில் காகித
கப்பல்கள் விடுவோம்...!
கப்பல் கரைகையில்
கவலையில் ஆழ்வோம்...!

இடையில் சிறு பிரிவு...
இப்பொழுது காண்கையில்...
அதே உற்சாகம்...!
மறைந்துவிட்ட நம்
குழந்தைப்பருவ குறும்புகள்...
மறையாமல் நம் நட்பு...!

ஆக்கிரமிப்பு!

மனசுக்குள் மத்தாப்பு!
இதழ்களில் சிரிப்பு!
உன் நினைவே!தித்திப்பு!
என் எண்ணமெங்கும்
உன் நினைவே!ஆக்கிரமிப்பு!

விடாது...!

விடாது காற்று!
விடாது மழை!
என்னுள்...!

விடாது அன்பு!
விடாது உன்
நினைவுகளும்...
என்னை...!

Tuesday, August 17, 2010

குரு கொடுக்கும் தட்சணை...

பாசமும், பரிவும் பெண்மையின் அழகே!
புகுந்த வீட்டில் பாசம் காட்டிடு பாசமகளே!
அடக்கமும், அமைதியும் பூவையினருக்குரியதே!
அடக்கமும், அமைதியும் காத்திடு அருமைமகளே!

மாமியாரும்,மாமனாரும் எங்களைப்போலவுனக்கே!
மரியாதையுடன் நடந்துகொள் மதிமகளே!
களைத்து வரும் கணவனுக்கு பக்குமாய்ச்சமைத்தே!
கனிவாய் அளித்திடு கனிமகளே!

மணாளனின் மனம் அறிந்து நடந்திடு
என் செல்வமகளே!
படித்த படிப்பில் சம்பாதித்து கணவனின் கஷ்டங்களை
களைந்திடு கருணைமகளே!

என்றே! வாழ்க்கையின் கல்வியை போதித்து
வரதட்சணை என்றே!
தட்சணையும்... அளித்திடும் குரு!
பெண்களை பெற்ற... பெருமைமிக்க பாக்கியசாலிகளே!

Monday, August 16, 2010

இடைவெளியில்லா...இணையில்லா நட்பு..!

எங்கோ பிறந்திட்டோம்!
எங்கோ வளர்ந்திட்டோம்!
கல்லூரியில் கண்டோம்!
தோழர்,தோழிகளானோம்!

ஆண்,பெண் பேதமில்லை
நமக்குள்ளே...!
அனைவரும் கலந்தே!
கதையடித்தோம்!

தேர்வுக்கு முந்தியநாள்
மட்டும்!
புதியதாய் புத்தகங்களை
காண்போம்!

'குரூப்ஸ்டடி' என்றே!
விளையாட்டாய்... கலகலப்பாய்...
புதிரான புத்தகத்தை
படித்து தெளிவோம்!

தேர்வறையிலே! மேற்ப்பார்வையாளரின்...
கழுகுப்பார்வையில் தப்பித்தே!
தவறான பதிலென்றே! தெரியாமல்...
வரிசையாக காப்பியடிப்போம்!

அரியர் விழுந்தால்
சில மணித்துளிகள் சோகம்...
பின் அரியரில்லா மனுஷன்
அரை மனுஷன் என்றே!
ஆறுதல்!

எல்லோரும் எங்கெங்கோ!
எப்பொழுதாவது போன்,மெயில்
என்றே! தொடர்கிறது!
இடைவெளியில்லா...
இணையில்லா நம் நட்பும்!

Saturday, August 14, 2010

அன்பினை மறுப்பது ஏனோ...!....?

அருமை,அருமையாய்
ஆகாரங்கள் அள்ளி
சுவைத்தால் கசக்கிறது!
பக்குவமாய் அனைத்தும்
கலந்திட்டாய்...
அன்பினை கலந்திட
மறந்திட்டாய்... அன்னையே!

அழகாய்,அழகழகாய்
ஆடைகளும்...,ஆபரணங்களும்...
அணிந்தாலும் அழகில்லை!
கண்குளிர ரசிக்க 'நீ'
மறுத்திட்டதால்....
புன்'நகையை' அணிய
மறுத்திட்டேன்... அன்னையே!

பயப்பட ஒன்றும் இல்லை
சிறியதாய் காய்ச்சல்
என்றார்!
பிரபல மருத்துவர்...
குணம் காணவில்லை...
உன் மடிசாய நீ
மறுத்திட்டதால்... அன்னையே!

Thursday, August 12, 2010

முக ஸ்துதி....

கண்ணை மூடி
கடவுளிடம் லயித்த என்னை!
ஸ்ஸ்ஸ்.....ப்பா என்ற சத்தமே!
கவனத்தை சிதறடித்தது!

தன்னை தூக்கியே!
நடந்ததால் அந்த
'பெரிய'யம்மாவின் களைப்பின்
வெளிப்பாடு ஸ்ஸ்ஸ்.....ப்பா........

தங்கம் விலை குறைந்துவிட்டதோ....!
என்றே! மெல்லிய ஆச்சரியம்...!
அங்கமெல்லாம் தங்கமே!
நிறைந்திருக்கிறது...! அந்தம்மாளிடம்...

அர்ச்சனையின் பாதியிலே!
பாதிவாய் பிளந்த
பவ்ய புன்னைகையில்
அர்ச்சகர்...!

ஸ்பெஷல் பிரசாதத்துடன்....
அந்தம்மாவின் முன்னால்...
அவர் புன்னைகை போலவே!
அர்ச்சனை தட்டில் காசு...!

பிரகாரத்தை வலம் வருகையில்
இருபெண்கள் கையை பிடித்தே
புன்னகையுடன்...
அந்தம்மாவை வலம் வருகிறார்கள்...
பணமழை பொழிகிறது....!

வெளிப்பிரகாரத்தில் பலர்
கையைகூப்பி வணங்கியே!
வெள்ளந்திப்புனகையுடன்.....
கப்பலோ! இல்லை காரில்...
வழியனுப்புகிறார்கள்....!
விடாது பொழிகிறது பணமழை!

ஆச்சர்யம் தாளாமல்
யாரந்தம்மா என்றேன்...
தாங்கிய பெண்களிடம்!
அந்த நிறுவனத்தின் நிறுவனர்
மனைவி! என்றே!

ஊரடித்து உலையில்
போட்ட காசு அந்த உடம்பு
என்றே! அந்தம்மாவை
போல் நடந்தே!(நடித்தே)...
கேலிச்சிரிப்பு....

ஊரடித்து உலையில் போட்ட
காசாம்.....
ஸ்பெஷல் பிரசாதமும்...
பணிவான கைகூப்பலும்...
வெள்ளந்தி புன்னகையும்...
தொடர்ந்த பணமழையில்
நனைந்ததும்... எதற்காக...!
ஸ்ஸ்ஸ்.....ப்பா....!!!!

Wednesday, August 11, 2010

உன் நினைவில்... என் ஜீவன்!

மனதிலிருந்து உனை
அகற்றவே! முற்படுகிறேன்...!
உனை மறக்க நினைத்த
நொடியில் நானே!
என்னிலில்லை என்றே!
உணர்கிறேன்!
உனை மறக்க நினைகையில்
என் ஜீவன் பிரிய நினைக்கிறது!
உன் நினைவில்... மட்டுமே!
என் ஜீவன்!

Tuesday, August 10, 2010

மழை!

கருமேகம் சூழும் இருளில்
என்னுள் மெல்லிய பிரகாசம்!
குளிர் தென்றல் மோதுகையில்
என்னுள் மெல்லிய அசைவு!

மழையே! வருவாயா! வரமாட்டாயா!
என்னுள் மெல்லிய பரிதவிப்பு!
மெல்ல!மெல்ல! தூரலிடுகையில்!

என் பரிதவிப்பு! மெல்ல!மெல்ல!
என்னுள் மெல்லிய புன்னகை
பூவாய் பூக்கிறது!

நீ மீட்டும் தூரல் இசையில்
இசைகிறேன் நானும்!
முகம் கொண்டு காணுகையில்
கண்களில் மெல்லிய படபடப்பு!

உன் பரவச நடனத்தில்
நானும் பரவசமாய்!
உன்னில் மெல்ல!மெல்ல!
கரையவே! துடிக்கிறது மனசு...!

Tuesday, August 3, 2010

தொலைதூரக் காதல்!

ஊரே! திருவிழா கொண்டாட்டத்தில்
ஒரு பார்வை மட்டும் என் மீது
முறைப்பாய் என் மறுபார்வை...
அசராமல் உன் பார்வை...!

தோழியுடன் திட்டினேன்...
பூவாய் சிதறியது உன் புன்னகை..!
பைத்தியமா! என்றேன்...
ஆம்! உன்! பைத்தியம் என்றாய்...

கோபமாய் திட்டித்தான் வீடு திரும்பினேன்
ஜன்னல் வழியே! கசங்கிய காகிதம்...
கடிதமாய் காதல் கவி வரைந்தாய்...
என்னுள் கனிந்தது காதல்...

தொலைவில் வேலைக்கு செல்வதாய்...
பிரிய மனமில்லை என்றாய்...
பிரியா விடையுடன் என் காதலை
அள்ளிக்கொண்டு சென்றாய்...

அலைபேசியே! கதி என்று கிடக்கின்றேன்...
நீ பேசும் இரு வரிக்காக...
உன் கடிதங்களை மறைத்து படிக்கும் பாடு
உன் காதல் கவிதை வரிகளில் கரைந்து போகிறது...

ஒற்றை மலரில்...
உன் முகம் காண்கிறேன்...!
குளிர் தென்றலில்...
உன் குரல் கேட்கிறேன்...!

பசுமை தரையில்...
உன் அருகாமையை உணர்கிறேன்...!
உன்னிடம் பேசுவது போல்...
நிலவிடம் பேசுகிறேன்...!

உன் கடிதங்கள்...
என் தலையணையில்...
விழிகள் நீ வரும் வழியில்
என்று வருவாய் என்ற பரிதவிப்போடு...!

இணையத்தில் சில விஷமிகள்...

கல்வியில் எழும் கேள்வியை...
கண்டறியவே!
இணையத்தில் இணைகிறாள்...

கேள்விக்கு பதில் கொடுத்தே!
ஒருவன் நண்பனாகிறான்...
கல்வியில் தொடங்கி நட்பாய்
தொடர்கிறது...

காணாமலே! காதல் விதை
விதைக்கிறான்!
காணவே! ஆசை என்கிறான்...
கண்டவுடன்! காதல் வேஷம் போட்ட

காமப்பிசாசு கன்னியவளை
களங்கப்படுத்துகிறது...
கல்வியில் வரும் இன்னலை
கண்டறிய வந்தவள்...

இணையத்தில் வந்த விஷமியால்
இணையத்திலே! இன்ப வாழ்கையை
தொலைதிட்டாள்...!

பிரிகிறேன்...

பிரியமாய் நான் உன்னிடம்...
பிரிந்து செல் என்று
சொல்லாமல் சொல்கிறாய்...

பிரிய எத்தனிக்கிறேன்!
உன்னை வெறுத்தல்ல!

என் பிரிவில்
உன் சந்தோசம் என்பதால்...

உன் பிரிவு எனக்கு
என்றுமே! வெளியிலே!
என் அகத்தில் என்றுமே! நீ!

பிரியா மனதுடன்...
நீ பிரியப்படுகிறாய்
என்றே! பிரிகிறேன்...

குடியில் கெடும் குடிகள்...

காலையில் பெண்டு,பிள்ளைகளிடம்
மாலையில் மளிகையும்,புத்தகமும்
வாங்கி வருகிறேன் என்றே! புறப்பட்டான்!

மூக்கை அடைக்கும் சாக்கடையில்...
முகம் சுளிக்கமால் முழுகுகிறான்...!

அழுக்கு துணிகளையும்
அலுப்பே இல்லாமல் அலசுகிறான்...!

அநாசயமாக முதுகில்
மூட்டையை முட்டி ஓடுகிறான்...!

தகிக்கும் தீயை சகித்து
வெந்தே இரும்பில் இரும்பாகிறான்...!

பரபரபாய் ஓடியே!
முதலாளியின் கட்டளையை முடிக்கிறான்...!

மாலையில் கை நிறைய காசு!
மளிகையும்,புத்தகமும் வாங்க செல்கையில்
வழியில் டாஸ்மாக்கில் கரைகிறது காசு!

தள்ளாட்டத்தில் வந்தவனிடம்
அடி, உதை தான் மிச்சம்
பெண்டு,பிள்ளைகளுக்கு...

மனைவியின் சொற்ப வருமானத்தில்
அரை வயிறு கஞ்சி நிறைகிறது...!

மறுநாள் காலையில் வழக்கம் போல்
பெண்டு,பிள்ளைகளிடம் கூறி செல்கிறான்....

தியானம்...!

என்னுள் இருக்கும் இன்பத்தை
வெளியில் தேடி களைத்தேன்...!
என்னுள் இருக்கும் இன்பத்தை
எனக்களித்த ஒரு வரம்...
தியானம்!

அலறும் அலைபேசிகள்....

அலைபேசி அலறுகிறது!
இன்னும் எத்தனை போலி
காதலர்களின் உரையாடலை
கேட்க்கப்போகிறோமோ! என்று....

போலி வாழ்க்கை...

சோர்ந்து சோபாவில்
பல மனிதர்கள்....
வேலை களைப்பல்ல!

தன் வீட்டை விட
அவன் வீடு பெரியது!

தனக்கு கிடைக்கும் முன்னே!
அவனுக்கு ப்ரோமோஷன்!

தன் மகனை விட
அவன் மகனுக்கு சம்பளம் அதிகம்!

தன் மகளை விட
அவன் மகளுக்கு பெரிய
இடத்து மாப்பிள்ளை...!

எவ்வளவு கிடைத்தாலும் போதவில்லை
என்று...!

அவனை விட முன்னேற!
தன்னுள் இன்பம் தொலைத்து....

பணத்திலும், போலி கௌரவத்திலும்
இன்பம் தேடிகொண்டிருகிறார்கள்...

வேஷம்!

அன்பே! பகலில் உன் பிரிவின்
வேதனையை மறைத்து சந்தோஷ
வேஷம் போடுவது...
இரவில் தலையணையின்
மடியில் களைகிறது!
உன் நினைவுகள் என்
கண்ணீர் மழையாய்...

பிரிவின் வலி...

உயிர் பிரியும் வலியை விட
கொடுமையானது!
காரணமின்றி உயிராய் நினைக்கும்
உறவு பிரியும் போது....

பிரியும் நட்பு...

ஆண்,பெண் நட்பினை
காதலென்று கிசு,கிசுப்பவர்களின்
இன்பம் ஐந்து நிமிடம்...
கலங்கப்படுவதோ!
தூய்மையான நட்பு!

வதந்திகளை பரப்புவதில்
என்ன இன்பமோ!
பிரிந்து செல்கிறது பல
தூய்மையான நட்பு!

ஹய் ஹீல்ஸ்...!

அவள் கால்களில் உள்ள
'ஹய்ஹீல்ஸ்' செருப்பும் இன்று
பெருமை கொண்டது! பேருந்தில்
இடிக்கும் இடிமன்னனை இன்று
மிதித்து விரட்டிவிட்டோம் என்று..

சிவந்த ரோஜா...

அவளிடம் ரோஜாவை நீட்டி
'ஐ லவ் யூ' சொன்ன போது...
அவன் கையிலுள்ள ரோஜா
'கோபத்தில் சிவந்தது' நேற்று
வேறு பெண்ணிடம் அவன்
தன்னை நீட்டி சொன்னது
இன்னும் எத்தனை பெண்களிடம்
சொல்வானோ! என்று...

அன்னை!

அன்னையே! என் ஆலயம்!
அன்னையே! என் உயிர்!
என்று பேசும் தன் மகனின்
"மேடை பேச்சை" பெருமிதத்தோடு
ரசித்தால் அன்னை!
முதியோர் இல்லத்திலிருந்து...

பல்லியின் குதூகலம்...

பல்லி அவன் மேல்
விழுந்ததால் தோஷம் என்று
குளிக்க சென்றான்...
குதூகலித்தது... பல்லி!
இன்றாவது குளிக்கிறானே! என்று..

அழியாத மரம்...

அழிக்க முடியாத
அழியாத ஒரு மரம்...
அன்பே! என் மனதில்
நீ ஊன்றிய
காதல் விதையால்....
தழைத்தது!

காதல்....கல்யாணம்!

கடலலை தொடும் மணலில்
காதல் ஓவியம் வரைந்தார்கள்...
காதலோவியம் கல்யாண வண்ணம் தீட்டியது!
காணவில்லை இன்று காதலோவியம்...
களவாடியது யாரோ!
கடலலை கரைத்து விட்டதோ!

மரம்,செடி,கொடிகளின் கேள்வி....

துன்பமின்றி வாழ தூய்மையான
காற்றை கொடுக்கிறோம்...
தாகமின்றி வாழ குளிர்ச்சியாய்
மழை கொடுக்கிறோம்...

பசியின்றி வாழ பலவகைகளில்
உணவினை கொடுக்கிறோம்...
வெப்ப கொடுமையின்றி பயணம்செய்ய
நிழலினை கொடுக்கிறோம்...

எண்ணங்களை எழுத்தாக்க
காகிதங்களை கொடுக்கிறோம்...
வியாதிகள் பல குணமாகிட
மூலிகைகள் பல கொடுக்கிறோம்...

மனிதனே!
உன் வாழ்வின் ஆதாரம் நாங்கள்...
ஏன்?
எங்கள் வாழிடங்களை பறித்து...
வானுயர் கட்டிடங்களாய் மாற்றுகிறாய்...!

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

களங்கமில்லாத எங்கள் நட்பை
காதலென்று நீ பறையடித்தாய்...
கடினமாய் உன்னை கண்டித்தேன்...
களங்கமில்லாத எங்கள் நட்பை
களங்கப்படுத்தியதற்காக இல்லை...

படித்த இளைஞன் நீ!
நாகரிங்கள் பல அறிந்தவன்!
படிப்பில் பல நாகரிங்களை கற்றறிந்தவன்...!
நாகரிகமென்று பல புதுமை
உடைகளை உடுத்துபவன்...!

நாகரிகமென்று சிகரெட்டில் சிக்கியவன்...!
நாகரிகமென்று தண்ணியில்(குடியில்) தத்தளித்தவன்...!
நாகரிக சிந்தை மட்டும் உன்னிடம் இல்லையோ!
நட்பையும்,காதலையும் பிரித்தறியாத மூடனாய்...
நீ இருக்கிறாய் என்ற மனவருத்தத்தில் மட்டுமே!

நித்தமும் உன் நினைவுடன்...!

நித்தமும் உன் நினைவே!
நீயின்றி ஏது வாழ்வு கண்னே!
நீ சொன்ன வார்த்தைகள் இவை
நிஜமென்று நான் நினைத்தேன்...
நீயோ வேறொருத்தியுடன்..
நானோ! நித்தமும் உன் நினைவுடன்...!

டைரி! என் உன்னத! உயரிய தோழி!

மனம் அயர்ந்து வரும் வேளைகளில்...
உன்னிடம் கொட்டி அழும்போது
ஆறுதலாய் இருக்கிறது!

மனம் குழம்பி வரும் வேளைகளில்...
உன்னிடம் கூறும்போது
தீர்வு கிடைக்கிறது!

மனம் மகிழ்ச்சி பெறும் தருணங்களில்...
உன்னிடம் பகிர்ந்து கொள்ளும்போது
குதுகலமாய் இருக்கிறது!

மனதின் ரகசியங்கள் சுமையாகும் வேளைகளில்...
உன்னிடம் பகிரும்போது
சுமைகள் லேசாகிறது!

என் இன்ப,துன்பங்களில் பங்கெடுக்கும்
"நீயே" என் உன்னத! உயரிய தோழி!

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்?

காதலை மறக்க தேவதாஸ்களாய்
மாறுபவர்களுக்கு தெரிவதில்லை...

காதல் நினைவுகளே!
சுகமாய்தான் இருக்கிறது! என்று

காலமெல்லாம் வாழ
காதலில் வாழ்ந்த சுகமான
நினைவுகள் போதுமே!

ஏன் மறக்க நினைகிறார்கள்....?

பார்க்காத காதல்!

விழிகள் நான்கும் கலக்காமலே
காதல் நுழைந்தது எவ்வழியே!
உயிரே! தெரியவில்லையே!

தூது போகும் குறுந்தகவலில்
என் மனதின் உன் நினைவுகளை
பதிக்கின்றேன்!

சிணுங்கும் "அலைபேசியில்" "நீ"யோ
என்று பார்க்கும் போது...
மனதில் மின்னல் வெட்டுகிறது!

நீ இல்லாமல் ஏமாறும் தருணங்களில்
அன்பான என் வார்த்தைகளில்
அலட்சியத்தை சந்திக்கிறது! எதிர்முனை!

மறக்க தான் நினைக்கின்றேன்...

மறக்க தான் நினைகின்றேன்!
அவனின் நினைவுகளை!
ஆனாலும்,
புல்லின் மேல் ஒற்றை பனித்துளியாய்
இதயத்தில் அவனின் நினைவுகள்
நின்று கொண்டுதான் இருக்கிறது...!

பிரிந்த ஆண்!, பெண் நட்பு!

ஊர் உனக்கும், எனக்கும் காதல் என்று பேசியதால்,
உன் நட்பெனும் உறவை முறித்துக்கொண்டேன்...
ஆனால்,
என் மனதின் அடிச்சுவட்டில் நம் களங்கமில்லாத
நட்பின் அடையாளங்கள் மறையவில்லை நண்பனே!

ஒரு தலை காதல்!

இல்லை என்று தெரிந்தும்
துடிகின்றது மனம்!
வேண்டும் என்று.......

கற்பனை என்று தெரிந்தும்
துடிகின்றது கண்கள்!
காண வேண்டும் என்று.......

பொய் என்று தெரிந்தும்
துடிகின்றது வார்த்தைகள்!
பேச வேண்டும் என்று.......

நான் என்று தெரிந்தும்
துடிகின்றது இதயம்!
நீ என்று தான்...

காதல்...

காதல் பொய் என்று நினைத்தேன்!
என்னை காதல் தாக்காதவரை...

அழகு,பணம் காதலுக்கு காரணம்
என்று நினைத்தேன்!

என்னை காதல் ஆட்கொள்ளாதவரை...

காதல் எதையும் எதிர்பார்க்காத
வர்ணிக்க வார்த்தையில்லாத உணர்வு
என்று இன்று நினைக்கிறேன்!

உன் நினைவுகள்...

அன்பே!
நான் இறந்த பிறகு
என் இதயத்தை பார்...
உன் நினைவுகள் மட்டுமே!
பதிந்திருக்கும்!
நம் காதல் மொழியால்...

காதல் இசை!

ஹார்மோன்கள் மீட்டும்
ஹர்மோனியமோ!
காதல் இசை....!

காதல் வர காரணம்...

காதல் வருவதற்கு,
கண்கள் தான் காரணம் என்று
கண்களை குருடாகினேன்...!

இசை தான் காரணம் என்று
செவிகளை செவிடாகினேன்...!

வார்த்தைகள் தான் காரணம் என்று
வார்த்தைகளை ஊமையாக்கினேன்...!

சுவாசம் தான் காரணம் என்று
சுவாசத்தை நிறுத்தினேன்...!

ஆனாலும்,
இதயம் துடிக்கின்றது ...
காதல்!...காதல்!...காதல்!... என்று...

சொல்லாத காதல்!

இரு விழிகளில் தொடங்கி
இரு இதயங்கள் ஒன்றாவது காதல்...
என் காதலோ என் இதயத்தில் தொடங்கி
என் இதயத்தில் சமாதி ஆகிறது...!