Tuesday, August 3, 2010

பார்க்காத காதல்!

விழிகள் நான்கும் கலக்காமலே
காதல் நுழைந்தது எவ்வழியே!
உயிரே! தெரியவில்லையே!

தூது போகும் குறுந்தகவலில்
என் மனதின் உன் நினைவுகளை
பதிக்கின்றேன்!

சிணுங்கும் "அலைபேசியில்" "நீ"யோ
என்று பார்க்கும் போது...
மனதில் மின்னல் வெட்டுகிறது!

நீ இல்லாமல் ஏமாறும் தருணங்களில்
அன்பான என் வார்த்தைகளில்
அலட்சியத்தை சந்திக்கிறது! எதிர்முனை!

1 comment: