Wednesday, August 25, 2010

வாடகைத்தாய்...

சுமப்பதில் இவளுக்கு சுகமே!
தாய்மை வரமருளும்
தாயுமானவள் இவளே!

மழலை வரமருளும்
மங்கையர்க்கரசி இவளே!
இல்லச்சுமையை சுமக்க
சுமை இவளுக்கு!

பத்தியமும்,விரதமும்
பத்துமாத பந்தத்திற்கு
பரிவுடனே! ஏற்க்கிறாள்...

தன்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும்
என்றறிந்தே!
அழகான பூவினை
அன்பாய் சுமக்கும்
கற்பகவிருச்சம் இவள்...!

சுமையின் சுகமும்
உதையின் இன்பமும்
உருவாக்கிய பரவசமும்
மழலை இவ்வுலகை
கண்டவுடன்...
இவளின் மனதில்
உதைத்து...
பறிக்கப்படுகிறதே!

1 comment:

  1. அருமையான வெளிப்பாடு ஜோதி வாழ்துகள்

    ReplyDelete